ரூ.19,900/- ஊதியத்தில் தமிழக அஞ்சல் துறை வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!
இந்திய அஞ்சல் துறையின் கீழ் அஞ்சல் மோட்டார் சேவை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Staff Car Driver பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- இந்திய அஞ்சல் துறையில் தற்போது பணியாளர் கார் டிரைவர் எனும் Staff Car Driver பதவிக்கு என 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இத்துடன் விண்ணப்பதாரர்கள் Pay matrix Level-01 as per 7th CPC என்கிற ஊதிய அளவின்படி, அஞ்சல் துறையில் Dispatch Rider (Group C) பணியில் பணிபுரிபவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- Light மற்றும் Heavy motor vehicle களில் குறைந்தது 3 ஆண்டுகள் ஓட்டுநர் பணி செய்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
- மேலும் Light மற்றும் Heavy motor vehicle க்கான ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
- மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 56 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும்.
- தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு Pay matrix Level-02 as per 7th CPC என்கிற ஊதிய அளவின் படி குறைந்தது ரூ.19,900/- மாத ஊதியம் அளிக்கப்படும். மேலும் இப்பணிக்கு வழக்கங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.
- விண்ணப்பதாரர்கள் Trade test அல்லது Driving test மூலம் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் Absorption / Deputation முறையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களை திகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.