இந்திய தபால் துறையில் 38,926 காலிப்பணியிடங்கள் – 10வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0

இந்திய தபால் துறையில் 38,926 காலிப்பணியிடங்கள் – 10வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

இந்திய தபால் துறை (India Post)ம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Gramin Dak Sevaks (GDS) as BPM / ABPM/ Dak Sevak பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மத்திய அரசின் இந்திய தபால் துறை தற்போது வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Gramin Dak Sevaks (GDS) as BPM / ABPM/ Dak Sevak பணிக்கு மொத்தமாக 38,926 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 4310 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
  • Gramin Dak Sevaks (GDS) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Mathematics மற்றும் English பாடப்பிரிவில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Gramin Dak Sevaks (GDS) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயதாக 18 வயது என்றும், அதிகபட்ச வயதாக 40 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

  • BPM பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பின் பணியமர்த்தப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.12,000/- ஊதியமாக அளிக்கப்படும் என்றும், ABPM / Dak Sevak பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பின் பணியமர்த்தப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.10,000/- ஊதியமாக அளிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
  • Gramin Dak Sevaks (GDS) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள், அதன் பின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
  • SC / ST / PwD / Trans Women மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது என்றும், இவர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- மட்டும் விண்ணப்பிக்க கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!