இந்திய தபால் துறையில் 38,926 காலிப்பணியிடங்கள் – 10வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
இந்திய தபால் துறை (India Post)ம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Gramin Dak Sevaks (GDS) as BPM / ABPM/ Dak Sevak பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- மத்திய அரசின் இந்திய தபால் துறை தற்போது வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Gramin Dak Sevaks (GDS) as BPM / ABPM/ Dak Sevak பணிக்கு மொத்தமாக 38,926 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 4310 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
- Gramin Dak Sevaks (GDS) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Mathematics மற்றும் English பாடப்பிரிவில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Gramin Dak Sevaks (GDS) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயதாக 18 வயது என்றும், அதிகபட்ச வயதாக 40 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.
- BPM பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பின் பணியமர்த்தப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.12,000/- ஊதியமாக அளிக்கப்படும் என்றும், ABPM / Dak Sevak பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பின் பணியமர்த்தப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.10,000/- ஊதியமாக அளிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
- Gramin Dak Sevaks (GDS) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள், அதன் பின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
- SC / ST / PwD / Trans Women மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது என்றும், இவர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- மட்டும் விண்ணப்பிக்க கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.