இந்தியாவில் மருத்துவ வசதி குறைவு !
இந்தியாவில் தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் மே மாதம் நடுவில் 13 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று சர்வதேச விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த தகவல் தொழில்நுட்பம் ! திறமையை காட்டும் அரசு !!!
கொரோனாவின் தாக்கம் திடீரென வேகமெடுத்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்க உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் 13 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பு, கொரோனா தடுப்பு முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் இதேபோன்ற நிலைமை நீடித்தால் மே மாதம் மத்தியில் சுமார் 1 லட்சம் பேர் முதல் 13 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படக் கூடிய நிலைமை உருவாகும் என்றும் கூறியுள்ளனர்.
இன்று இரண்டாம் நாள் – நிலைமை என்ன !!!
1,000 பேருக்கான மருத்துவமனை படுக்கைகள் என்பது அமெரிக்காவில் 2.8%; இத்தாலியில் 3.4%; பிரான்ஸில் 6.5%; சீனாவில் 3.4% என இருக்கிறது. ஆனால் இந்தியாவில் மிக குறைவாக 0.7% தான் இருக்கிறது என்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது இன்றியமையாததாகும்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |