இந்தியாவில் மீண்டும் மினி ஊரடங்கு உத்தரவு? பிரதமர் இன்று ஆலோசனை!!
இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து ஆலோசிக்க இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி வருகிறது. நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடுகிறது பாதிப்பு எண்ணிக்கை. மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னெச்சரிக்கை பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. மற்ற நாடுகளை விட இந்தியா தற்போது கடும் பாதிப்பை சந்தித்து கொண்டிருக்கிறது.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தினசரி பாதிப்பு 3 லட்சங்களையும், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. வேறு எந்த நாட்டிலும் இந்தளவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது கிடையாது என WHO தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 22 ஆயிரத்து 245 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல மூத்த அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் ‘கற்போம் எழுதுவோம்’ இயக்கம் – ஜூலை வரை நீட்டிப்பு!
இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவ வசதிகள் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்து, மினி ஊரடங்கு பிறப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது. இந்த கூட்டம் முடிந்த பிறகு இது தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தெரிகிறது. எனவே இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்