இந்தியா – ஜப்பான் இடையே விமான பயிற்சி – நாடுகளின் உறவை வலுப்படுத்த திட்டம்!

0
இந்தியா - ஜப்பான் இடையே விமான பயிற்சி - நாடுகளின் உறவை வலுப்படுத்த திட்டம்!
இந்தியா - ஜப்பான் இடையே விமான பயிற்சி - நாடுகளின் உறவை வலுப்படுத்த திட்டம்!
இந்தியா – ஜப்பான் இடையே விமான பயிற்சி – நாடுகளின் உறவை வலுப்படுத்த திட்டம்!

இந்தியா மற்றும் ஜப்பான் இடையே முதன் முதலாக கூட்டு விமான பயிற்சி நடைபெறவுள்ளது. இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

விமான பயிற்சி:

இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே உள்ள உறவை வலுப்படுத்தும் வகையிலும் பாதுகாப்பை இன்னும் அதிகப்படுத்தும் நோக்கிலும் கூட்டு விமான பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியானது ஜப்பானின் ஹைக்குரி விமானத்தளத்தில் வரும் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.

ஜன.15ம் தேதி SBI கிளார்க் தேர்வு 2023 – தேதியை மாற்ற வலுக்கும் கோரிக்கை!

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த பயிற்சியில் இந்திய விமானப்படையின் 4 சு-20 எம்கேஐ ஜெட் விமானங்களும் 2 சி-17 விமானங்களும் ஒரு ஐஎல் -78 விமானமும் பங்கேற்க உள்ளது. அதேபோல் ஜப்பானின் 4 எப்-2 மற்றும் 4 எப்-15 மற்றும் 4.5 விமானமும் பங்கேற்க உள்ளது. தற்போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது.

இந்த நேரத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்த கூட்டு விமானப்படை பயிற்சி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர் பயிற்சிக்கு ‘வீர் கார்டியன் 2023 ’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பயிற்சியின் மூலம் இரு நாடுகளின் திறமையை பகிர்ந்துகொள்வது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!