அதிரடியாக மூடப்பட்ட இந்தியாவின் முக்கிய வங்கி? RBI உத்தரவு – வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகை?
ஆர்பிஐ வங்கியானது ரூபே கூட்டுறவு வங்கி லிமிடெட் -ன் உரிமைத்தை ரத்து செய்துள்ளது. இதனால் இன்று முதல் இந்த வங்கியின் அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்படும்.
RBI உத்தரவு:
இந்திய ரிசர்வ் வங்கி புனேவைச் சேர்ந்த ரூபே கூட்டுறவு வங்கி லிமிடெட் உரிமைத்தை ரத்து செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி,வெளியிடப்பட்டது. வங்கிக்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மும்பை உயர் நீதிமன்றம் இது தொடர்பாக அளித்த உத்தரவினை வெளியிட்ட ஆறு வாரங்களுக்குப் பிறகு இவை நடைமுறைக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இதனால் செப்டம்பர் 22ம் தேதியான இன்று முதல் ரூபே வங்கி தனது வணிக சேவைகளை நிறுத்திக் கொண்டுள்ளது.
வங்கி மூடப்படுவதால் அதன் வாடிக்கையாளர்கள், வங்கியில் வைத்திருக்கும் தொகை என்ன ஆகும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், கூட்டுறவு வங்கி அளித்த தகவலின் படி, 99 சதவீதத்திற்கும் அதிகமான டெபாசிட்தாரர்கள், டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (DICGC)-யில் இருந்து தங்கள் வைப்புத்தொகையின் முழுத் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம். மே 18, 2022 நிலவரப்படி, DICGC ஏற்கனவே மொத்த காப்பீடு செய்யப்பட்ட டெபாசிட்களில் ரூ.700.44 கோடியை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது என்ன பகல் கொள்ளையா இருக்கு? மதுரை விமான நிலையத்தில் அரங்கேறும் பகிர் சம்பவம்!
Exams Daily Mobile App Download
ரூபே கூட்டுறவு வங்கிக்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது, மேலும் வங்கி ஒழுங்குமுறை சட்டம், 1949 இன் சில விதிகளுக்கு இணங்கவில்லை என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. நாட்டில் உள்ள முக்கிய கூட்டுறவு வங்கி மூடப்பட்டுள்ளது, வங்கி பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்