இந்தியாவில் அக்.1 முதல் கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி – மத்திய அரசு!
இந்தியாவிலிருந்து அக்டோபர் 1 முதல் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தகவல் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றுமதி :
இந்தியாவில் கொரோனா தொற்றை ஒழிக்கும் முயற்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் முதல் 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்பட்டு தொற்றிலிருந்து நம்மை காக்கிறது. கொரோனா தடுப்பூசி நல்ல பலனை அளிப்பதால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. அனைத்து மாநில அரசுகளும் தடுப்பூசிகள் வேண்டி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
அண்ணா பல்கலை இணைப்பு பெற்ற கல்லூரிகளின் பட்டியல் – வெளியீடு!
இதனால் மத்திய அரசு தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்து நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உற்பத்தியை அதிகப்படுத்தி தட்டுப்பாடுகள் இன்றி தடுப்பூசிகளை வழங்கியது. அனைத்து மாநிங்களிலும் முன்பை விட தற்போது தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்தி முடிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
சென்னை: 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு – மாலை நிலவரம்!
இந்த நிலையில் அக்டோபர் 1 முதல் இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தகவல் தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டது போக உபரியாக இருக்கும் தடுப்பூசிகளை மட்டும் தான் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அடுத்த மாதம் 30 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படும் என்பதால் தடுப்பூசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.