மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – 11 பேர் பலி! அச்சத்தில் பொதுமக்கள்!
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
கொரோனா தொற்று கடந்த 2 வருடங்களாக உலக மக்களையே ஆட்டிப் படைத்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இன்று வரை கொரோனாவுடன் போராடி கொண்டு தான் இருக்கிறோம். 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, வுகான் நகரில் அதிக பேரழிவை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்தியா, ரஷ்யா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பரவி நாடுகளில் பரவி உச்சம் தொடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில் இருந்து தற்போது வரை கொரோனா பல்வேறு பெயர்களில் உருமாற்றம் அடைந்து மனிதர்களிடையே பரவி பெரும் நோய் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த தொற்றை கட்டுப்படுத்த 2 வகையான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு உள்ளது. வுகான் நகரில் கொரோனா வை கட்டுப்படுத்த ஜீரோ கோவிட் பாலிசியை சீன அரசு கடைபிடித்து வந்ததால் அந்த தொற்றின் வேகம் கட்டுக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீன நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவியது. இதனால் சீன அரசு மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளை கையில் எடுத்தது. இதன் பலனாக ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து சீன அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தளர்வு அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்கி உள்ளது. அந்த வகையில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதேபோல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
- புதிதாக 12,213 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,57,730 ஆக உயர்ந்தது.
- புதிதாக 11 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,803 ஆக உயர்ந்தது.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 7,624 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,74,712 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.65% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.
- சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.13% ஆக குறைந்துள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 58,215 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- இந்தியாவில் 1,95,67,37,014 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 15,21,942 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.