இந்தியாவில் ஒரே நாளில் 3.79 லட்சம் பேருக்கு கொரோனா – உலகளவில் முதலிடம்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்த நோயாளிகள் குறித்த புள்ளி விவரங்கள், பலி எண்ணிக்கை அதில் அடங்கியுள்ளது.
கொரோனா புள்ளி விவரம் :
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. மேலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சம் அடைகிறது. மத்திய, மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளையும் அறிவித்து வருகிறது. உலகளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் முதலிடம் வகித்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
கடந்த வருட கொரோனா பாதிப்பை விட தற்போதைய கொரோனா இரண்டாம் பரவல் இந்தியாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முதலாம் கொரோனா பரவலின் போது இந்தியா அதை நன்றாக கையாண்டதாக மற்ற நாடுகள் பாராட்டி வந்தன. ஆனால் தற்போது இந்தியா நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,645 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏப்ரல் 30 முதல் மே 14 வரை பகுதி நேர ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!!
இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை – புதிதாக 3,79,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,83,76,524 ஆக உயர்ந்தது. புதிதாக கடந்த 24 மணி நேரத்தில் 3,645 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,04,832 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,69,507 பேர் குணமடைந்துள்ளனர்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.1500 நிவாரண நிதி – மாநில அரசு அறிவிப்பு!!
இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,50,86,878 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 30,84,814 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்