நாடு முழுவதும் மே மாதம் கொரோனா உச்சம் பெறும் – விஞ்ஞானிகள் தகவல்!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அடுத்த மாதம் 14-18 தேதிகளில் உச்சம் பெறும் என்றும், அப்போது பாதிக்கபடுவோர் எண்ணிக்கை 4.4 லட்சம் பேராக இருப்பார்கள் என கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா உச்சம்:
கடந்த ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா தாக்கம் தற்போது இரண்டாம் அலையாக உச்சம் பெற்றுள்ளது. இதனால் பல மாநிலங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3.52 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் 3 பேர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அதில் அடுத்து வரும் மே மாதத்தில் 14-18 ஆம் தேதி வரை கொரோனா உச்ச கட்டத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4.4 லட்சம் பேராக இருப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 15 முதல் 20 தேதிகளில் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை தொடும் என விஞ்ஞானிகள் கணித்தனர்.
இந்தியாவிற்கு ரூ.135 கோடி கொரோனா நிதியுதவி வழங்கல் – சுந்தர் பிச்சை அறிவிப்பு!!
ஆனால் செப்டம்பர் மாதத்தில் மட்டுமே அந்த அளவு அடைந்தது. அதன் பின்னர் கடந்த வாரம் அந்த கணிப்பை மாற்றி மே 11-15 தேதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33 முதல் 35 லட்சமாக இருக்கும். அதே போல அடுத்த மாதம் பாதிப்பு எண்ணிக்கை 38 முதல் 48 லட்சம் பேராக இருக்கும் என்று ஐஐடி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.