இந்தியாவில் ஒரே நாளில் 58,419 பேருக்கு கொரோனா தொற்று – 1,576 பேர் பலி!!
இந்தியாவில் கொரோனா தொற்றின் வீரியம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கு குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா தொற்று வீரியம் இழந்து காணப்பட்டு வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேர நிலவரப்படி நாட்டில் 60 ஆயிரத்திற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவல் மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஜூன் 28 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 58,419 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஏற்பட்ட மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2,98,81,965 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் நாட்டில் மேலும் 1,576 பேர் தொற்றால் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,86,713 ஐ எட்டியுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 87,619 பேர் குணமடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் ஜூன் 21 முதல் பேருந்துகள் இயங்க அனுமதி? முன்னேற்பாடுகள் தீவிரம்!
இதன் மூலம் நாட்டில் தற்போது வரை தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,87,66,009 ஆக உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவனையில் 7,29,243 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா தடுப்பூசி 27,66,93,572 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.