இந்தியாவில் துவங்கிய 3வது அலை? ஒரே நாளில் 37,875 பேருக்கு கொரோனா! 369 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,875 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 369 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 37,875 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,96,718 ஆக அதிகரித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்ட போதிலும் பாதிப்புகள் முழுமையாக குறையவில்லை இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை வந்து விட்டது என்று தகவல் வெளியாகி உள்ளது. அதனால் மக்கள் அலட்சியம் காட்டாமல் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்துகிறது.
TNPSC குரூப் 4 & VAO தேர்வு அறிவிப்பு எப்போது? பாடத்திட்டம் மாற்றம்?
தற்போது வரை இந்தியாவில் 78,47,625 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 369 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,41,411 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் மூத்த தலைவர் புலமைப்பித்தன் காலமானார் – கட்சியினர் இரங்கல்!
அதனால் நாக்பூரில் மூன்றாம் அலை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் ஒரே நாளில் 39,114 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,22,64,051 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,91,256 பேர் மருத்துவமனையில் சிகிச்சை தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.