இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,222 பேருக்கு கொரோனா – 290 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 290 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,58,843 ஆக அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 69,90,62,776 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த்ப்பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த 4 செயலிகளை பயன்படுத்துபவர்களா நீங்கள்? SBI வங்கி எச்சரிக்கை!
அதனை தொடர்ந்து புதிதாக 290 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 3,30,58,843 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தை விட தற்போது அதிகரிக்கும் பாதிப்புகள் கொரோனா மூன்றாம் அலையின் அறிகுறி என்று இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் அனைத்து மாநிலங்களிலும் மூன்றாம் அலையை தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வு – ஓய்வு வயது நீட்டிப்பு!
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 42,942 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 32,224,937 ஆக உயர்ந்துள்ளது. மொத்த குணமடைந்தோர் விகிதம் 97.44% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,92,864 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.23% ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.