இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,948 பேருக்கு கொரோனா – 219 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து உள்ளது. மேலும் 219 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் கடந்த 24 மணி நேரத்தில் 38,948 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,30,27,621 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் நோய் பரவல் குறையவில்லை. தடுப்பு பணியின் ஒருபகுதியாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அனைத்து மாநிலங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – நாளை மறுநாள் ஆலோசனை!
இதுவரை நாட்டில் 68,75,41,762 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மேலும் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 219 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,40,752 ஆக உயர்ந்துள்ளது.
கோவை பள்ளிக்கு ஒருநாள் விடுமுறை அறிவிப்பு – 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!
அதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,903 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,81,995 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,04,874 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.