இந்தியாவில் ஒரே நாளில் 383 பேர் உயிரிழப்பு – 26,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 383 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிர வேகமெடுத்து பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,35,31,498 ஆக உயர்ந்துள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட போதிலும் உயிரிழப்புகள் குறைந்த பாடில்லை. நேற்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 383 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 4,45,768 ஆக அதிகரித்துள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு பொருந்தாது? அரசு விளக்கம்!
இந்த நிலையில் தொற்றையும், அதனால் ஏற்படும் உயிரிழப்பையும் தடுக்க நாட்டில் 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் செலுத்தியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதனால் 97% உயிரிழப்பில் இருந்து தடுக்க முடியும் என்று ஆய்வுகளை தெரிவிக்கிறது. எனவே மக்கள் அலட்சியம் காட்டாமல் கொரோனாவை ஒழிக்க அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் தொடக்க, நடுநிலை பள்ளிகள் திறப்பு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இதுவரை நாட்டில் 82,65,15,754 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 34,167 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,278,3741 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 30,198 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.