இந்தியாவில் தொடங்கிய 3வது அலை – ஒரே நாளில் 34,403 பேருக்கு கொரோனா! 320 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34,403 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 320 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,33,81,728 ஆக அதிகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தடுப்பு பணியின் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 63,97,972 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 77,24,25,744 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 VAO தேர்வு இம்மாதம் அறிவிப்பு – தேர்வர்கள் எதிர்பார்ப்பு!
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 320 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,44,248 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிழப்புகள் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மூன்றாம் அலை வந்து விட்டது. அதற்கான அறிகுறிகள் சில மாநிலங்களில் தென்படுகிறது என்று தகவல் வெளியாகி வருகிறது.
TNPSC வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு – வைரலாகும் #Justiceformenin ஹேஷ்டேக்!
அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் விரைவாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்துகிறது. மேலும் நேற்று ஒரே நாளில் 37,950 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,25,98,424 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,39,056 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.