இந்தியாவில் எகிறும் கொரோனா – ஒரே நாளில் 41,965 பேர் பாதிப்பு! 460 பேர் பலியான பரிதாபம்!
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் முதலியன குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
கொரோனா நிலவரம்:
கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நோய் பரவும் விகிதம் கட்டுப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது நாட்டில் சில பகுதிகளில் படிப்படியாக நோய் பரவும் விகிதம் அதிகரித்து வருகிறது. கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் விகிதம் அதிகரிக்கிறது. இதனை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில் நோய் தொற்று பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் OPS மனைவி காலமானார் – தலைவர்கள் இரங்கல்!
கொரோனா பரவும் விகிதம் அதிகரித்ததை தொடர்ந்து, இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதன்படி நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.38 லட்சத்தை தாண்டி வருகிறது. அதே போல் நோய் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையும் 3.27 கோடியை தாண்டி உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்த தரவுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 41,965 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் நோய்த் தொற்றால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,28,10,845 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 460 பேர் இறந்துள்ள நிலையில் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,39,020 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தாக்கத்தில் இருந்து ஒரே நாளில் 33,964 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,19,93,644 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 3,78,181 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுவரை 65,41,13,508 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.