இந்தியாவில் ஒரே நாளில் 44,230 பேருக்கு கொரோனா – 555 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 555 பேர் உயிரிழந்து உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் தீவிரமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அரசின் நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக கடந்த மாதத்தில் பாதிப்புகள் குறைந்தது வந்தது. இது பெரும் ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருந்தது. ஆனால் இன்னும் தடுப்பூசிகள் முழுமையாக செலுத்தி முடிக்கப்படவில்லை. அதற்குள் நாடு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 2 முதல் 100% ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை – ஆணையர் உத்தரவு!
அதனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது மூன்றாம் அலை கொரோனாவாக இருக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதற்கு ஒரே தீர்வு தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தி முடிப்பது தான் என்று உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா போன்ற பெரிய நாடுகள் இந்தாண்டு இறுதிக்குள் 100% தடுப்பூசி இலக்கை எட்ட வேண்டும் என்று கூறுகின்றனர். இதுவரை இந்தியாவில் 45,60,33,754 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 44,230 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக நாட்டில் இதுவரை 3,15,72,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிகிச்சை பலனின்றி 555 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,23,217 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்புகள் அதிகம் இருக்கும் போதிலும் தொற்றிலிருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 42,360 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,05,155 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.