இந்தியாவில் ஒரே நாளில் 43,509 பேருக்கு கொரோனா உறுதி – 640 பேர் பலி!
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வந்து கொண்டிருக்கும் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பலி எண்ணிக்கை முந்தைய நாளை விட 640 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக மீண்டும் விதிக்கப்பட்ட முழு முடக்கத்தினால் நோய் தொற்று பாதிப்பானது தற்போது வீழ்ச்சி கண்டு வருகிறது. இருப்பினும் ஒரு நாளைக்கு சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக மே மாதத்தில் ஏற்பட்ட கொரோனா தினசரி பாதிப்பு 4 லட்சமாக பதிவு செய்யப்பட்டு வந்த போது பலி எண்ணிக்கையும் 4 ஆயிரத்துக்கும் அதிகமாக ஏற்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – விரைவில் அறிவிப்பு!
இந்த பாதிப்பு எண்ணிக்கையை விட தற்போது உள்ள பாதிப்பு குறைவாக காணப்பட்டு வந்தாலும், இது கொரோனா 3 ஆம் அலைக்கான பாதிப்பு என மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர். அதன்படி கடந்த சில வாரங்களாக ஏற்பட்டு வரும் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருவதால் இது கொரோனா 3 ஆம் அலைக்கான துவக்கமாக கருப்படுகிறது. எனினும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,509 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,15,28,114 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று (ஜூலை 28) ஒரு நாளில் 640 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 4,22,662 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றில் இருந்து ஒரே நாளில் 38,465 பேர் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தோர் விகிதம் 3,07,01,612 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 4,03,840 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 45,07,06,257 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.