இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 374 உயிரிழப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல் !!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் கடந்த 24 மணி நேரத்தில் 374 உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 30,093 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காட்டுத்தீ போல பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அனைத்து வயதினருக்கும் தொற்று எளிதாக பரவுகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக ஊரடங்கை பிறப்பித்து மக்கள் நடமாட்டத்தை குறைத்தது, பொதுப்போக்குவரத்தை ரத்து செய்து பயணங்களை தவிர்த்து நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா நோய் தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டு நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனாலும் பாதிப்புகள் குறைந்தபாடில்லை இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
TNPSC VAO காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – அமைச்சர் அறிவிப்பு!
பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் தங்களின் வாழ்வாதாரம் இழந்து அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்பட்டனர். இதற்கிடையில் மருத்துவத் துறையின் முயற்சியால் கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தொடங்கி தற்போது வரை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை இந்தியாவில் 41,18,46,401 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தினசரி கொரோனா பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை தகவல்களை வெளியிட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 30,093 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,11,74,322 ஆக உள்ளது. மேலும் 374 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதனால் நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,14,482 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆறுதல் அளிக்கும் செய்தியாக கொரோனவிலிருந்து ஒரே நாளில் 45,254 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,03,53,710 ஆக உள்ளது. இதன் தொடர்ச்சியாக 4,06,130 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.