இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,628 பேருக்கு தொற்று உறுதி- 617 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 617 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் :
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 38,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்த பாதிப்புகள் 3,18,95,385ஆக அதிகரித்துள்ளது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகரிக்கும் பாதிப்புகள் மீண்டும் முழு ஊரடங்கிற்கு வித்திடுமோ என்ற மன நிலையில் மக்கள் உள்ளனர்.
அண்ணா பல்கலையில் DDE மூலம் MBA..,MCA படிப்புகளுக்கு விண்ணப்பம் – ஆன்லைனில் துவக்கம்!
தொடர்ந்து பாதிப்புகளை குறைக்கும் முயற்சியாக 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 49,55,138 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 50,10,09,609 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 617 பேர் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4,27,371 ஆக உயர்ந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் 40,017 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 3,10,55,861 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 4,12,153 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்படி மொத்த பாதிப்பில் 1.29% பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பு 2.39 % பதிவாகியுள்ளது. என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.