இந்தியாவில் ஒரே நாளில் 36,401 பேருக்கு கொரோனா தொற்று – 530 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,401 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 530 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36,401 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,23,22,258 ஆக அதிகரித்துள்ளது. நாள் தோறும் அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கைகள் மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகப்படுத்துகிறது. கொரோனவை கட்டுப்படுத்தும் பணிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கு செலுத்தப்பட்டு வருகிறது.
ICC T20 உலகக் கோப்பை போட்டிகள் – முன்னணி வீரர்களுடன் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
இதுவரை நாடு முழுவதும் 56,64,88,433 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 530 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,33,049 ஆக அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து இந்தியாவில் டெல்டா வகை வைரஸ் பரவி வருவதால் பாதிப்புகள் உயர்ந்து வருகிறது. எனவே இதனை தடுக்க அனைத்து மாநிலங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் கொரோனா தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் 39,157 பேர் மீண்டுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,15,25,080 ஆக உயர்ந்துள்ளது. மேலும் குணமடைந்தோர் விகிதம் 97.52% ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,64,129 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.14% ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.