இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32,937 பேருக்கு கொரோனா – 417 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 32,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 417 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 32,937 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,22,25,513 ஆக அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் பணியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் 17,43,114 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் 54,58,57,108 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் இருந்து விலகிய நடுவர் பென்னி தயால் – இதுதான் காரணம்!
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 417 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,31,642 ஆக உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களாக அதிகரிக்கும் தொற்றால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையில் மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் கவனத்துடன் பொது இடங்களுக்கு சென்று வர வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.
TN Job “FB Group” Join Now
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 35,909 பேர் மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,14,11,924 ஆக உயர்ந்துள்ளது. மேலும் குணமடைந்தோர் விகிதம் 97.48% ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிப்புகள் தொடர்வதால் தற்போது வரை 3,81,947 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.