இந்தியாவில் ஒரே நாளில் 27,176 பேருக்கு கொரோனா தொற்று – 284 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 284 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,33,16,755 ஆக அதிகரித்துள்ளது. தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் முயற்சியாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 61,15,690 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 75,89,12,277 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
Apple iPhone 13 சீரிஸ் அட்டகாசமான அம்சங்களுடன் வெளியீடு – செப்.17 முதல் முன்பதிவு துவக்கம்!
இந்த நிலையில் நாட்டில் புதிதாக நேற்று ஒரே நாளில் 284 கொரோனா நோயாளிகள் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 4,43,497 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் 97% உயிரிழப்பை தடுக்க முடியும் என்று ICMR அறிக்கை தெரிவிக்கிறது.
செப்.30 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – கொரோனா 3ம் அலை எதிரொலி!
அதனால் மக்கள் அலட்சியம் காட்டாமல் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. நேற்று ஒரே நாளில் 38,012 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும் குணமடைந்தோர் சதவீதம் 97.62 ஆக உள்ளது. அதுமட்டுமின்றி 3,51,087 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.