இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,393 பேருக்கு கொரோனா – 911 பேர் பலி!

0
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,393 பேருக்கு கொரோனா - 911 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,393 பேருக்கு கொரோனா - 911 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,393 பேருக்கு கொரோனா – 911 பேர் பலி!

கொரோனா 2 ஆம் அலை பரவல் தொற்று குறைந்து வந்துகொண்டிருக்கும் சூழலில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 43,393 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர நேற்று (ஜூலை 8) ஒரு நாளில் 911 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்புகள்:

கடந்த 2 மாதங்களுக்கு முன்னாக நாடு முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா பாதிப்பானது தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. அதாவது கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தினசரி பாதிப்பு 4 லட்சம் வரை பதிவு செய்யப்பட்டு வந்தது. அதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமடைந்து வந்தது. மறு புறத்தில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் – அமைச்சர் தகவல்!

இந்த கட்டுப்பாடுகள் நிமித்தமாக கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் ஏற்படும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையானது 50 ஆயிரத்துக்கும் கீழாக சரிந்துள்ளது. அதனால் மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய பாதிப்புகள், இறப்புகள், சிகிச்சை பெறுபவர் விகிதம், குணமடைந்தவர் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!!

அந்த தகவலின் படி இந்தியாவில் நேற்று (ஜூலை 9) ஒரு நாளில் 43,393 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,07,52,950 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 911 பேர் பலியான நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 4,05,939 ஐ எட்டியுள்ளது. தவிர 44,459 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் விகிதம் 2,98,88,284 ஆக அதிகரித்துள்ளது. தவிர நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 4,58,727 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 36,89,91,222 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!