இந்தியாவில் ஒரே நாளில் 1,32,788 பேருக்கு கொரோனா – 3,207 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணிநேர நிலவரப்படி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் 2 லட்சத்திற்கு குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று ஒரே நாளில் 1,32,788 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாகவே கொரோனா தொற்றின் வீரியம் சற்று குறைந்து வருகிறது. இதன் காரணமாக பாதிப்பு மற்றும் உயிரிழப்பின் விகிதமும் குறைந்து உள்ளது. கடந்த மே மாதத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி வந்த நிலையில் தற்போது 2 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் எற்பட்ட கொரோனா பாதிப்பின் நிலவரம் குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.
ஜியோ (Jio) பயனர்களுக்கு செம அறிவிப்பு – ரூ.98 திட்டம் மீண்டும் அறிமுகம்!
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,32,788 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2,83,07,832 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 3,207 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பின் எண்ணிக்கை 3,35,102 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல் நேற்று ஒரே நாளில் 2,31,456 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் நாட்டில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,61,79,085 ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா தொற்று பாதிப்பினால் 17,93,645 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று ஒரே நாளில் 20,19,773 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நாட்டில் தற்போது வரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,00,57,330 ஆக அதிகரித்துள்ளது.