இந்தியாவில் ஒரே நாளில் 41,157 பேருக்கு கொரோனா உறுதி – 518 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 518 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
இந்தியாவில் கொரோனா 2வது அலை கட்டுக்கடங்காமல் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வந்தது. இதனால் தினசரி 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் பதிவாகி வந்தது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநிலம் தழுவிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு – அமைச்சர் அறிவிப்பு!
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 41,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,11,06,065 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 518 பேர் உயிரிழந்து உள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 4,13,609 ஆக உயர்ந்து உள்ளது. ஒரே நாளில் 42,004 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்ப்பு!!
இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,02,69,796 ஆக உள்ளது. தற்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் 4,22,660 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 40,49,31,715 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.