இந்தியாவில் ஒரே நாளில் 35,178 பேருக்கு கொரோனா தொற்று – 440 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,178 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 440 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. பாதிப்புகளும், உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35,178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,22,85,857 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடங்கள் – தேர்வர்கள் குழப்பம்!
நேற்று ஒரே நாளில் மட்டும் 440 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 4,32,519 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியா முழுவதும் 56,06,52,030 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது மூன்றாம் அலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளை தாக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் குழு தெரிவித்துள்ளது.
தமிழிசை செளந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி இன்று காலமானார் – தலைவர்கள் இரங்கல்!
அதனால் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனையில் உள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 37,169 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,14,85,923 பேர் குணமடைந்துள்ளனர். அதனை தொடர்ந்து 3,67,415 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.