இந்தியாவில் மீண்டும் எகிறும் கொரோனா – ஒரே நாளில் 22,431 பேருக்கு தொற்று! 318 பேர் பலி!
கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையை தொடர்ந்து தற்போது மீண்டும் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் கொரோனா தாக்கம் குறித்த விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா நிலவரம்:
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. மூன்றாம் அலை பரவும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
TNPSC குரூப் 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை விளக்கம்!
தற்போது மீண்டும் நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் புதிதாக 22,431 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,38,94,312 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு – இன்றைய நிலவரம்!
மேலும் 318 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 4,49,856 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24,602 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 3,32,00,258 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,44,198 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தரவுகள் கூறுகின்றன. இதுவரை இந்தியாவில் 92,63,68,608 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 43,09,525 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.