இந்தியாவில் ஒரே நாளில் 9,520 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசி, ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றின் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தொற்றால் 4 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகிதம் குறித்த அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சென்னை: நகை வாங்க இது தான் சரியான நேரம் – அதிரடியாய் குறைந்த ஆபரண தங்க விலை!
இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் இன்று புதிதாக 9,520 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4,43,98,696 என அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,27,597 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி உயிரிழந்தோர் விகிதம் 1.18% ஆக குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா நோயால் 4,37,83,788 பேர் மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் குணமடைந்தோர் விகிதம் 98.62% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இன்னும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் 87,311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்படி தற்போது சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.20% ஆக குறைந்துள்ளது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 31,60,292 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2,11,13,94,639 ஆக அதிகரித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்