இந்தியாவில் ஒரே நாளில் 41,506 பேருக்கு கொரோனா – 895 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று 2வது அலை தினசரி பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணிநேரத்தில் 41,506 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் சார்பில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தத்ப்பட்டன. இதனால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்து உள்ளது. கொரோனா 3வது அலை குழந்தைகளை அதிகளவு பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.
யுவா-ப்ரீத்தி கல்யாணம் நடைபெறுமா? விறுவிறுப்படையும் ‘கண்ணான கண்ணே’ தொடர்!
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி ஒரே நாளில் 41,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 895 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,08,040 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 41,526 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு நேர மாற்றம் – அரசுக்கு கோரிக்கை!
இதன் மூலம் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2,99,75,064 ஆக அதிகரித்து உள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 4,54,118 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 37,60,32,586 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.