இந்தியாவில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா – 1,258 பேர் பலி!
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று 2வது அலை பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 1,258 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பு:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த மாதத்தில் உச்சத்தை அடைந்து வந்தது. இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக தினசரி 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டது. இதனை கட்டுப்படுத்த மாநில வாரிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கி உள்ளது. இருப்பினும் டெல்டா பிளஸ் கொரோனா வேரியண்ட் பல மாநிலங்களில் பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு தளர்வுகளில் கவனம் தேவை என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA & DR) – நிதி அமைச்சகம் விளக்கம்!
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 50,040 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,02,33,183 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 57,944 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 2,92,51,029 ஆக உயர்ந்துள்ளளது. மேலும் 1,258 பேர் உயிரிழந்து உள்ளதால், மொத்த பலி எண்ணிக்கை 3,95,751 ஆக அதிகரித்து உள்ளது.
ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து – மாநில முதல்வர் அதிரடி உத்தரவு!!
தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் 5,86,403 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் விரைவில் கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா மீளும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.