இந்தியாவில் கொரோனாவால் 43,071 பேர் புதிதாக பாதிப்பு – 955 பேர் மரணம்!!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகின்றது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 43,071 புதிதாக இந்த நோய் தாக்கத்தினால் பாதிப்படைந்துள்ளனர்.
கொரோனா பரவல்
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா என்ற நோய் பாதிப்பு மக்களை அச்சுறுத்தி வருகின்றது. அந்த வகையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வண்ணமாக இருந்து வந்தது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நாள் ஒன்றிற்கு 4 லட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக பாதிப்படைந்து வந்தனர். பின், ஊரடங்கு கட்டுப்பாடுகளின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தது.
புதிய வகை டெல்டா வைரஸ் மேலும் உருமாறும் – உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் பேட்டி!!
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய் தாக்கத்தினால் பாதிப்படைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் மற்றும் குணம் அடைந்தவர்களின் பட்டியலை மத்திய சுகாதார அமைச்சகம் தினம்தோறும் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 43,071 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,05,02,362 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் நேற்று 955 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் மொத்தமாக மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,02,005 ஆக உயர்ந்துள்ளது. அதே போல இந்த தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 52,299 பேர் குணம் அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,96,58,078 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போது வரை 35,12,21,306 கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டுள்ளது.