இந்தியாவில் ஒரே நாளில் 3.68 லட்சம் பேருக்கு கொரோனா – 3,417 பேர் பலி!!

0
இந்தியாவில் ஒரே நாளில் 3.68 லட்சம் பேருக்கு கொரோனா - 3,417 பேர் பலி!!
இந்தியாவில் ஒரே நாளில் 3.68 லட்சம் பேருக்கு கொரோனா - 3,417 பேர் பலி!!
இந்தியாவில் ஒரே நாளில் 3.68 லட்சம் பேருக்கு கொரோனா – 3,417 பேர் பலி!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல்:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக 4.01 லட்சத்தை நெருங்கியது. மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து நேற்று 3.92 லட்சமாக பதிவானது.

TN Job “FB  Group” Join Now

தற்போது மீண்டும் குறைந்து கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தாலும் நேற்று ஒரு நாள் 3,417 பேர் உயிரிழந்து உள்ளனர். அதே நேரத்தில் நேற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 732 ஆக உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக புதிய பதிவாளர் நியமனம் – ஒருங்கிணைப்பு குழு தலைவர் உத்தரவு!!

இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தமாக 1 கோடியே 99 லட்சத்து 25 ஆயிரத்து 604 ஆக உள்ளது. அதே போல நோய் உறுதி செய்யப்பட்டு அதில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,62,93,003 ஆக உள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 959 பேர் ஆகும். தற்போது வரை 34 லட்சத்து 13 ஆயிரத்து 642 தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!