இந்தியாவில் ஒரே நாளில் 68 ஆயிரம் பேருக்கு கொரோனா – 291 பேர் உயிரிழப்பு!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா விவரங்கள்:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்கம் வீரியம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வீடுகளிலேயே முடங்கினர். மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
TN Job “FB Group” Join Now
குறிப்பாக கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பல ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வந்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
நாட்டா நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு – ஏப்ரல் 1 கடைசி நாள்!!
நாட்டில் கொரோனா வைரஸால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறந்தவர்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, “கடந்த 24 மணி நேரத்தில் 68,020 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,20,39,644 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தல்!!
அதேநேரத்தில் தொற்றில் இருந்து 32,231 பேர் குணமடைந்துள்ளனர். எனவே குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,13,55,993 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 291 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,61,843 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5,21,808 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாடல் தேர்வுகள் – பெற்றோர்கள் கோரிக்கை!!
இரண்டாம் அலை கொரோனா தாக்கத்தின் விளைவாக குணமடைந்தவர்கள் விகிதம் 94.32% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1.34% ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.33% சதவிகிதமாக உள்ளது. இந்தியாவில் 6,05,30,435 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.