கொரோனா பரவல் எதிரொலி – ஊரடங்கை அமல்படுத்திய மாநில அரசுகள்!!

0
கொரோனா பரவல் எதிரொலி - ஊரடங்கை அமல்படுத்திய மாநில அரசுகள்!!கொரோனா பரவல் எதிரொலி - ஊரடங்கை அமல்படுத்திய மாநில அரசுகள்!!
கொரோனா பரவல் எதிரொலி - ஊரடங்கை அமல்படுத்திய மாநில அரசுகள்!!
கொரோனா பரவல் எதிரொலி – ஊரடங்கை அமல்படுத்திய மாநில அரசுகள்!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டில் உள்ள சில மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை தாக்கம்:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒருநாள் மட்டும் இந்தியாவில் 40000 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒருநாள் மட்டும் தொற்று எண்ணிக்கை 11 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளன.

TN Job “FB  Group” Join Now

மேலும் பல மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் கொரோனா பரவல் குறித்த அறிவிப்பு பின்வருமாறு,

மார்ச் 28 வரை அரசு கல்லூரிக்கு விடுமுறை – கொரோனா பரவல் எதிரொலி!!

மகாராஷ்டிரா:

மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா தாக்கம் அதிகமாக பரவும் மாநிலமாக உள்ளது. மாநிலத்தில் தொற்று எண்ணிக்கை அதிகபட்சமாக ஒரே நாளில் 25,800ஐ கடந்துள்ளது. அதனால் அம்மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இவை கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பரவல் உருவாகி உள்ளதற்கான அறிகுறியாக உள்ளது.

புதுச்சேரி 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை – ஆளுநர் ஆலோசனை!!

பீகார்:

பீகார் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் வேகமாக பரவி வருவதால் மாநிலத்தில் உள்ள மருத்துவர்களுக்கு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு கொரோனா பரவல் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. செய்முறைத் தேர்வுகளுக்கான புதிய அறிவிப்பு 2021 !!

மத்திய பிரதேசம்:

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக குவாலியர், ஜபல்பூர், உஜ்ஜைனி போன்ற மாவட்டங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மார்க்கெட்டுகள், வணிக வளாகங்களுக்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ கிளாஸ் – அரசு உத்தரவு!!

குஜராத்:

குஜராத் மாநிலத்தில் பரவி வரும் கொரோனா பரவல் காரணமாக இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் போக்குவரத்து சேவையும் நிறுத்தப்படும். அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் கட்டாயமாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!