இந்தியாவில் கொரோனா 2ம் அலை தாக்கம் ஏப்ரலில் உச்சம் பெறும் – SBI கணிப்பு!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது இந்நிலையில் ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்கு பின் இது உச்சம் பெறும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) கணித்துள்ளது.
கொரோனா பரவல்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடங்கியது. அதன் பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 50,000க்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் அதிகம் உள்ள 6 மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆய்வு நடத்தியது. அதில் கூறியுள்ளவை, “கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு 100 நாட்கள் வரை நீடிக்கும்.
தமிழகத்தில் அதிகளவு கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!
இரண்டாம் அலை கொரோனா காரணமாக நாட்டில் உள்ள 25 லட்சம் மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஒரே நாளில் அதிகமாக பரவி வரும் கொரோனா காரணமாக ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் உச்சம் பெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் மத்திய அரசின் அறிவிப்பு படி கொரோனா கட்டுப்பாடு விதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பரவல் அதிகமாக உள்ள இடங்களில் மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.