நாடு முழுவதும் 10 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா – சுகாதாரத்துறை விளக்கம்!!
நாடு முழுவதும் உள்ள 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தான் கொரோனா பாதிப்பு 79.3 சதவீதமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா தாக்கம்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதன் பின்னர் மத்திய, மாநில அரசின் துரித நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமெடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2.34 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, “நாடு முழுவதும் அதிகமாக கொரோனா பரவல் கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. நேற்று அந்த மாநிலத்தில் கொரோனா தாக்கத்தால் 63,729 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா தாக்கம் 79.3 சதவிகிதமாக உள்ளது. மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், கேரளா, குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது.
முகக்கவசம் அணிந்தால் மட்டுமே உள்ளே அனுமதி – நகராட்சி அறிவிப்பு!!
இந்நிலையில் மத்திய அரசு கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளது. இதுவரை 12 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் உலகில் மிகப்பெரிய தடுப்பூசி திருவிழா இந்தியாவில் கொண்டப்படுகிறது. முதற்கட்டமாக சுகாதார முன்களப் பணியாளர்க்ள், 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டோர் போன்றவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.