இந்தியாவில் ஒரே நாளில் 4,205 பேர் பலி – மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!!
இந்தியாவில் கொரோனா இராண்டாம் அலை காரணமாக ஒரே நாளில் 4,205 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்கள் வெளியிட்டுள்ளது.
கொரோனா புள்ளிவிவரம் :
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தொற்று எண்ணிகையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு முயற்சிகளும் பலன் அளிக்காமல் போய் விட்டது. உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. பல்வேறு நாடுகளும் இந்தியவிற்கு பல மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இது வரை இந்தியாவில் 2,33,40,938 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை கொரோனா நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டு வருகிறது. அதன் படி இன்று புதிதாக 3,48,421 பேர் வைரஸ் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,33,40,938 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் சதவீதம் 83.04%ஆகும்
இன்று முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 4205 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,54,197ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றிற்கு ஆளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 1,93,82,642 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 37,04,099 பேர் மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருகின்றனர். சிகிக்சை பெறுவோரின் சதவீதம் 15.87% ஆகும். நாட்டில் 17,52,35,99 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
hi