நாடு முழுவதும் 149 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை – அமைச்சர் விளக்கம்!!
நாடு முழுவதும் கடந்த 7 நாட்களில் 149 மாவட்டங்களில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1.41 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் உயர்நிலை அமைச்சர்கள் குழுவின் 24-வது கூட்டம் காணொலி மூலமாக நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
அதில் பேசிய அமைச்சர் கூறுகையில்,”இந்தியாவில் கடந்த 7 நாட்களில் 149 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. கடந்த 2 வாரங்களில் 8 மாவட்டங்களிலும், கடந்த 28 நாட்களாக 63 மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பு எவருக்கும் இல்லை. மேலும் கொரோனா பாதிப்பை குறைக்க தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு வர 3 மாநிலங்களுக்கு மட்டும் இ-பாஸ் கட்டாயமில்லை – அரசு அறிவிப்பு!!
கொரோனாவால் அதிகமாக 15 முதல் 44 வயதுடையவர்கள் அதிகாமாக பாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளார். மேலும் அதில் 60 க்கு மேற்பட்டவர்கள் தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் வசதிகள் அதிகாமாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.