சர்வதேச விமான பயணிகள் கவனத்திற்கு – இனி ‘இது’ கட்டாயமில்லை!! வெளியான சூப்பர் அறிவிப்பு!!
நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சர்வதேச விமான பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மற்றொரு விதிமுறையை ரத்து செய்து விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது
விமான பயணிகள்
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக மற்ற நாடுகளில் இருந்து வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் ‘ஏர் சுவிதா’ தளத்தில் இருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தியது மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சுய அறிவிப்பு படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதில் பயணிகள் செலுத்தி கொண்ட கொரோனா தடுப்பூசி, செலுத்திய தேதி உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். இந்த நிலையில் கொரோனா பரவல் நாட்டில் கணிசமாக குறைந்து கொண்டு வருவதால் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு வருகிறது. அதன்படி இனி சர்வதேச பயணிகள் ‘ஏர் சுவிதா’ படிவத்தை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Face Book, Instagram பயன்படுத்தும் இளம் வயதினர் – தீமைகளை தடுக்க விரைவில் புதிய அம்சம்!
Exams Daily Mobile App Download
அதன்படி இதனை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த நடைமுறை மீண்டும் அமலுக்கு கொண்டு வரப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் பயணிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல்,கை கழுவுதல் மற்றும் தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.