IND vs SA 2nd ODI: தினேஷ் கார்த்திக்கின் பிளேயிங் 11 இதுதான்! கூடுதல் பௌலர்களுக்கு வாய்ப்பு!

0
IND vs SA 2nd ODI: தினேஷ் கார்த்திக்கின் பிளேயிங் 11 இதுதான்! கூடுதல் பௌலர்களுக்கு வாய்ப்பு!
IND vs SA 2nd ODI: தினேஷ் கார்த்திக்கின் பிளேயிங் 11 இதுதான்! கூடுதல் பௌலர்களுக்கு வாய்ப்பு!
IND vs SA 2nd ODI: தினேஷ் கார்த்திக்கின் பிளேயிங் 11 இதுதான்! கூடுதல் பௌலர்களுக்கு வாய்ப்பு!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதை தொடர்ந்து இன்று தொடங்கவிருக்கும் 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் பௌலிங் யூனிட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

தினேஷ் கார்த்திக் பரிந்துரை:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் காயம் காரணமாக இந்திய ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. ரோஹித்துக்கு பதில் இந்திய டெஸ்ட் அணி வைஸ் கேப்டன் KL ராகுல் ஒரு நாள் தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 17 ஆம் தேதி போலந்து மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை தொடர்ந்து இன்று தொடங்கவிருக்கும் 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் பௌலிங் யூனிட்டில் இரு பௌலர்களை முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் பரிந்துரைத்துள்ளார்.

தமிழகத்தில் நாளை (ஜன.22) பள்ளிகளுக்கு விடுமுறை – கல்வி ஆணையர் அறிவிப்பு!

முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 296 ரன்கள் எடுத்தது. 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் களம் இறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தவான், கோஹ்லி, தாக்குர் ஆகியோர் அரைசதம் அடித்தும் இந்திய அணியால் டார்கெட்டை சேஸ் செய்ய முடியவில்லை. இதனால் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்திய பௌலர்கள் தொடக்கத்திலேயே விக்கெட்களை எடுத்தாலும் பின்பு வந்த பாவுமா மற்றும் வான் டெர் டுசென் ஆகிய இரு பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச தடுமாறினர்.

மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு இல்லை – அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

இதனால் இந்திய பௌலிங் யூனிட்டில் மாற்றம் செய்து 16 பேர் கொண்ட அணியில் மீதம் உள்ள வேகப்பந்து வீச்சளர்களான பிரதிஷ் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோரை அணியில் சேர்க்க தமிழ்நாடு வீரர் தினேஷ் கார்த்திக் பரிந்துரைத்துள்ளார். பிரதிஷ் கிருஷ்ணா, முகமது சிராஜ் இருவரும் மிடில் ஒவேரில் சிறப்பாக பந்துவீசும் பௌலர்கள் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்தார். இதனால் 2வது போட்டியில் இருவரை அணியில் சேர்த்து விளையாடினால் தென்னாபிரிக்கா மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விக்கெட் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறினார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!