இந்தியாவின் 24வது தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா – இன்று பதவியேற்பு!!
இந்தியாவின் 23வது தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று (ஏப்ரல் 13) பதவி ஏற்கிறார்.
தலைமை தேர்தல் ஆணையர்:
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த சுனில் அரோரா அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. கடந்த வாரம் வரை அவரது பணிக்காலத்தில் அசாம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் மேற்கு வங்காளத்தில் 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக இவர் பணியாற்றியுள்ளார். இவரது பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று (ஏப்ரல் 13) பதவி ஏற்கிறார். அவர் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி வரை பதவியில் இருப்பார்.
தமிழகத்தில் ஆன்லைனில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – ஆசிரியர் கழகத்தினர் தீர்மானம்!!
இவரது தலைமையில் கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மாநில தேர்தல்கள் நடைபெற உள்ளது. இவர் 1980 ஆம் ஆண்டு பேட்ஜ் வருவாய் துறை அதிகாரியாக பணியாற்றியவர். அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி அன்று தேர்தல் அதிகாரியாக பொறுப்பெற்றார். அதன் பின்னர் தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பதவி ஏற்கவுள்ளார்.