பொறியியல் & கலை கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு காலவரையற்ற அவகாசம் – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத காரணத்தினால் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு தான் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதன்பின்பு, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியானதுமே அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது வரைக்குமே சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
Exams Daily Mobile App Download
மேலும், தமிழகத்தில் உள்ள 163 கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நேற்றுடன் முடிவடைந்துள்ளது. ஆனால், சி.பி.எஸ்.இ மாணவர்களுக்காக சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் வரைக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கான கடைசி தேதி ஜூலை 17 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தேதியும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள அறிவுறுத்தல் – அமைச்சர் பேட்டி!
மேலும், பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாகவோ அல்லது உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்க இருக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு இதுவரைக்கும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், கல்லூரிகள் திறந்த பிறகு இந்த மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.