தமிழகத்தில் அக்.28 முதல் காலவரையற்ற போராட்டம்? உயரவுள்ள அத்தியாவசிய பொருளின் விலை!
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து தற்போது பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லையெனில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக பால் உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டம்:
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கத்தை தொடர்ந்து அத்திவாசிய பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதில் குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலையானது உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் சாமானிய மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதையடுத்து அத்தியாவசிய பொருளான பால் கொள்முதல் விலையானது உயர்த்தப்படாமல் உள்ளது. அதனால் பால் உற்பத்தியாளர்கள் போல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக சேலத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க செயற்குழு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இச்சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறியிருப்பதாவது, ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பால் ரூ.31லிருந்து ரூ.41 ஆகவும் மற்றும் எருமைப்பால் ஒரு லிட்டர் ரூ.41லிருந்து ரூ.51 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இந்த விலை உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் இது தொடர்பாக தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு சிறப்பு போனஸ்? கைக்கு வரும் ரூ.5000! அரசு எடுக்கப்போகும் முடிவு!!
Exams Daily Mobile App Download
இது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை மதுரை, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாகவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த போராட்டத்திற்கு பின்பும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லையெனில் வருகிற 28ம் தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற பால் கொள்முதல் நிறுத்த போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்