IND vs ENG 4வது ஓவல் டெஸ்ட் – இங்கிலாந்து அணி அறிவிப்பு, சாம் கரனுக்கு குட் பை?
இந்தியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மார்க் உட், கிறிஸ் வோக்ஸ் என இருவரும் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர். இதனால் சாம் கரனுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது என கூறப்படுகிறது.
டெஸ்ட் தொடர்:
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே 3 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. முதல் போட்டி மழையினால் டிராவில் முடிவடைய, 2வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அசத்தியது. லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் இந்திய அணியை திக்குமுக்காட வைத்தது. இதனால் 4வது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
நாடு முழுவதும் செப்.30 வரை போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு – DGCA உத்தரவு!
இத்தொடரில் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில் 4வது டெஸ்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான 15 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க் உட், கிறிஸ் வோக்ஸ் இருவரும் அணிக்கு திரும்பி உள்ளதால் சாம் கரன் பெஞ்சில் உட்கார வைக்கப்படலாம். 3வது டெஸ்டில் பவுலிங்கில் மிரட்டிய ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது. ஜோஸ் பட்லருக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் அணியில் இணைய உள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
Tokyo Paralympics 2020: ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு இரட்டை பதக்கம்!!
ஓவல் மைதானத்தில் செப்.2ம் தேதி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு 4வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதற்கான 15 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் பின்வருமாறு, ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது, டேவிட் மலான், ஜோ ரூட், டேன் லார்னஸ், ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி, சாம் கரன், கிரெய்க் ஓவர்டன், ஆலி ராபின்சன், ஆண்டர்சன், ஆலி போப், சாம் பில்லிங்ஸ், மார்க் உட், கிறிஸ் வோக்ஸ்.