IND vs ENG 4வது டெஸ்ட் – முன்னிலை பெற்றது இந்தியா! சதத்தை நோக்கி ரோஹித் சர்மா
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடி வருகின்றனர்.
IND vs ENG 4வது டெஸ்ட்:
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் தொடங்கியது. 1-1 என தொடர் சமநிலையில் உள்ளதால் இதில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
T20 World Cup : இந்திய அணிக்கு சவால் விட்ட பாகிஸ்தான் கேப்டன் – எகிறும் எதிர்பார்ப்பு!
முதல் இன்னிங்சில் இந்திய அணிக்கு ரோஹித் 11 ரன்கள் ராகுல் 17 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்த வந்த புஜாரா 4 ரன்கள், ஜடேஜா (10), ரஹானே (14), பண்ட் (9) என அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் வரிசையாக பெவிலியன் திரும்பினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கோஹ்லி அரைசதம் (50 ரன்கள்) கடந்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தாக்குர் 57 ரன்கள் (36 பந்துகள், 7 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுக்க இந்திய அணி 61.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இன்ஸ்டாகிராமில் 150 மில்லியன் பாலோவர்ஸ் – விராட் கோஹ்லி புதிய சாதனை!!
இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ராபின்சன் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ரோரி பர்ன்ஸ் (5), ஹசீப் ஹமீத் (0), கேப்டன் ஜோ ரூட் (21) ரன்களில் வெளியேறினர். மலான் 31 ரன்கள், ஓவெர்ட்டன் 1 ரன்னில் வெளியேறினாலும், ஒல்லி போப் (81) பெர்ஸ்டோ (37), மொயீன் (35), கிறிஸ் வோக்ஸ் (50) ஆகியோரின் பங்களிப்பால் 84 ஓவர்களில் 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தாயகம் திரும்பிய தமிழக வீரர் மாரியப்பன் – தலைநகரில் உற்சாக வரவேற்பு!
தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி நேற்றைய இரண்டாவது நாளின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் குவித்து இருந்தது.
மூன்றாவது நாள் அப்டேட்ஸ்:
- இந்திய அணியின் ரோஹித் 28 ரன்கள் (76 பந்துகள், 3 பவுண்டரி) ராகுல் ராகுல் 35 (63 பந்துகள், 6 பவுண்டரி) ரன்களுடன் காலத்தில் உள்ளனர். 23 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் குவித்து உள்ளது.
- அரைசதத்தை நெருங்கிய நிலையில் ராகுல் 46 ரன்களில் (101 பந்துகள் 6 பவுண்டரி, 1 சிக்ஸர்) ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 34.5 ஒவர்களின் முடிவில் 83-1 எனற நிலையில் 16 ரன்கள் பின் தங்கியுள்ளது
-
நிதானமாக அடித்தளம் அமைத்து வரும் இந்திய பேட்ஸ்மேன்கள் தற்போது ரன்களை சேகரித்து வருகின்றனர். தற்போது உணவு இடைவெளி விடப்பட்டுள்ளது. களத்தில் ரோஹித் 47 ரன்கள் (131 பந்துகள், 5 பவுண்டரி) மற்றும் புஜாரா 14 ரன்கள் (21 பந்துகள், 3 பவுண்டரி) உள்ளனர். இந்தியா 42 ஓவர்களில் 108-1 என 9 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
-
இதில் ரோஹித் சர்மா ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். சர்வதேச அரங்கில் 11 ஆயிரம் ரன்களை கடந்த தொடக்க ஆட்டக்காரர்கள் பட்டியலில் அவர் இணைந்துள்ளார். 246 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். சச்சினுக்கு அடுத்து இந்த சாதனையை படைத்த இந்திய வீரரானார் ரோஹித் சர்மா
- நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரோஹித் 67 ரன்கள் (172 பந்துகள், 8 பவுண்டரி) மற்றும் புஜாரா 40 ரன்கள் (59 பந்துகள், 7 பவுண்டரி) ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் குவித்து 57 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.