அதிகரிக்கும் ஆன்லைன் வங்கி சேவைகள் – முழு விவரங்கள்!!
தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து வங்கி சேவைகளும் சில மொபைல் செயலிகள் மூலமாக எளிதாகிவிட்டது. இதுகுறித்து இந்த பதிவில் காணலாம்.
ஆன்லைன் வங்கி சேவைகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனை சரி செய்ய கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. அதனால் பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இலவச மளிகை பொருட்கள் தேக்கம் – பொருட்களை திரும்ப பெற கோரிக்கை !
கொரோனாவால் மக்கள் வெளியே வராமல் இருக்க ஆன்லைன் வர்த்தகங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அனைத்து மக்களும் அண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துவது மூலமாகவும் இந்த வசதி எளிமையாகி உள்ளது. இதற்காக பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த செயலிகளில் கோட் ஸ்கேனர், மொபைல் எண், ஐடி, அக்கவுன்ட் நம்பர் எனப் பல ஆப்ஷன்கள் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
அதே போல், போன் பில், கேஸ் பில், மின்சாரக் கட்டணம் எனப் பலவற்றை இன்று இவ்வகை ஆப்களின் மூலம் செலுத்தி விட முடியும். மேலும் ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனை செய்ய பல ஆபர்கள் வழங்கப்படுகின்றன. இதனால் இதனை பயன்படுத்துபவர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் கிராமப்புறம் முதல் நகரம் வரை அனைத்து மக்களும் இந்த செயலிகளை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.