தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு – அச்சத்தில் பொதுமக்கள்! அமைச்சர் அறிவுரை!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
காய்ச்சல்:
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே மக்களுக்கு அதிகம் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இது இன்புளுயன்சா காய்ச்சல் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக குழந்தைகள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் குழந்தைகள் வார்டுகள் நிரம்பி வழிகின்றது. சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி போன்றவைகள் இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவுகிறது. அதனால் நோய் அறிகுறியுடையவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு சார்பாக காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எப்போதும் மழை காலங்களில் இது போன்ற காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். அதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தங்கம், வெள்ளி நகைகளுக்கான கட்டணம் திடீர் உயர்வு – நகை வியாபாரிகள் அதிர்ச்சி!
Exams Daily Mobile App Download
இந்த காய்ச்சல் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள சாதாரண காய்ச்சல் தான் என்றும் கூறியுள்ளார். மேலும் காய்ச்சலை கண்டறிந்து தடுப்பதற்கான முகாம் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். நேற்று மட்டும் தமிழகத்தில் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்