தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்!

0
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் அடுத்து வரும் நாட்களில், மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா:

தமிழகத்தில் ஓமிக்ரான் மற்றும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. . இருப்பினும் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் மக்கள் தடுப்பூசிகளை விரைந்து செலுத்துமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் அரசு முதல் கட்டமாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijay TV Bigg Boss Promo – மீண்டும் போட்டிக்களத்தில் கலகலப்பூட்டிய ‘பிக் பாஸ்’ வீடு!

மேலும் பொது மக்கள் வெளி இடங்களில் கூட்டம் கூட கூடாது. கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அனைத்து இடங்களிலும் கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறது. இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. மேலும் விடுமுறை தினமான ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தினத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொது இடங்களுக்கு செல்ல மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ நடிகை வினுஷா தேவியின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வு துறைச் செயலாளர் ஒமைக்ரான் தொற்று பரவும் வேகம் அதிகரிப்பதால், மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். ஒமைக்ரான் பாதிப்பில் 5 முதல் 10 சதவீதம் தான் மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்படுகிறது. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள், உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும் அடுத்து வரும் நாட்களில், மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!